தூத்துக்குடி.
தூத்துக்குடி போல் பேட்டை சி.எஸ்.ஐ. தூய மிகாவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா 23.12.2022 அன்று ஆலயத்தில் வைத்து கொண்டாடப்பட்டது.
சி.எஸ்.ஐ. தூய மிகாவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சபை குருவானவர் மைக்கேல்ராஜ் கிறிஸ்துமஸ் ஆராதனை பாடல்கள் பாடி, சிறப்பு ஜெபக் கூட்டம் நடத்தினார். கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.


இந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தொழிலதிபர் கேப்டன் பி.சுதன் கீலர் மற்றும் சபை குருவானவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார்கள்.
பின்னர் ஏழை, எளியவர்களுக்கு கிறிஸ்துமஸ் வெகுமதி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சி.எஸ்.ஐ. தூய மிகாவேல் ஆலய கிறிஸ்துமஸ் விழாவினை ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
கிறிஸ்துமஸ் விழாவிற்கு வருகை தந்த அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்லி தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

