தூத்துக்குடி.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார், மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தியிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த கோரிக்கை மனுவில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கீழ்க்கண்ட பகுதிகளில் டேவிஸ்புரம் மெயின்ரோடு முதல் டேவிஸ்புரம் புதிய நியாயவிலைக்கடை வரை, ஜெ.ஜெ.நகர் பள்ளிவாசல் தென்புறம், ஜெ.ஜெ.நகர் முண்டசாமி நாகசக்தி அம்மன் கோவில் தெரு, சேசுநகர் 5 மற்றும் 6 தெரு, ஆனந்த நகர், 3 மற்றும் 5 தெரு, சிலோன்காலனி புறக்காவல் நிலையம் ரோடு, திரேஸ்நகர் மேல்பகுதி முதல் காமராஜ் பள்ளி வரை, மேற்கு காமராஜ் தெற்கு தென்வடல் ரோடு, மேற்கு காமராஜ் நகர் தென் கிழமேல் முதல் தெரு, மேற்கு காமராஜ் நகர் முதல் தூத்துக்குடி மாநகராட்சி எல்லை முடிவு வரை, வடக்கு சோட்டையன் தோப்பு கீழ்பகுதி ரோடு, பூப்பாண்டியாபுரம் 4வது தெருவில் 1 மற்றும் 2வது குறுக்கு தெரு, வ.உ.சி நகர் எல்கை பலகை முதல் குமரன் நகர் வரை, பூப்பாண்டியாபுரம் 4வது தெரு முதல் வ.உ.சி நகர் வரை, தாளமுத்துநகர் 4வது தெரு, நேருகாலனி பிள்ளையார் கோவில் முன் மற்றும் பின் தெரு, நேருகாலனி முதல் தெரு, கீதாஜீவன் நகர் தென்வடல் ரோடு, தாளமுத்து நகர் ஆர்.சி. கோவில் எதிர், சமீர்வியாஸ்நகர் 3வது மற்றும் 5வது தெரு முதல் ஆனந்த நகர் வரை, மாதாநகர் வடக்கிலிருந்து 1வது தெரு கிழமேல் ரோடு, மாதாநகர் மேல்பக்கம் குறுக்கு தென்வடல் ரோடு, மாதாநகர் 2 மற்றும் 3 தெரு, கணபதி நகர் 7வது தெரு, துரைசிங் நகர் 4வது தெரு, திரேஸ்நகர் கீழ்பகுதி முதல் டி.சவேரியார்புரம் வரை, எம்.ஜி.ஆர்.நகர் பிள்ளையார் கோவில் எதிர் மற்றும் டேவிஸ்புரம் மெயின் வரை, எம்.ஜி.ஆர்.நகர் முதல் கொத்தனார் காலனி வரை, எம்.ஜி.ஆர்.நகர் பிள்ளையார் கோவில் எதிர் கிழக்கிலிருந்து 2வது தெரு, ஆரோக்கியபுரம் மேல்பகுதி முதல் தெரு, சமீர்வியாஸ்நகர் சோனா மண்டபம் பின்புறம் 1,2,3 தெருக்கள் மற்றும் தென்வடல் ரோடு, சமீர்வியாஸ்நகர் முதல் கீழ அழகாபுரி வரை, சமீர்வியாஸ்நகர் 7 மற்றும் 8வது தெரு, வண்ணாரபேட்டை 4வது தெரு, சிலுவைப்பட்டி தெற்கு தெரு, கணேசபுரம் நடுத்தெரு, தாளமுத்துநகர் 1வது தெரு ஆகிய 48 பகுதிகளில் மிகவும் பழுதடைந்த பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாத காரணத்தால் புதிய தார்சாலைகள் அமைத்து தர வேண்டும் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தியிடம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளருமான அருண்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

