தூத்துக்குடி பா.ஜ.க மேற்கு மண்டல நிர்வாகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல இளைஞரணி தலைவர் மாரியப்பன் தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மாநகர பாஜக மேற்கு மண்டல இளைஞரணி தலைவர் மாரியப்பன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் எம்எல்ஏ. முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்த பாஜகவினரை வரவேற்ற அமைச்சர் கீதாஜீவன் திமுக கலர் சால்லை அணிவித்தார். வரும் தேர்தலில் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். நல்ல பணி செய்யும் போது பொறுப்புகள் தானாக வந்து சேரும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் வைதேகி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச்செயலாளர் முக்கையா, கருணா, அல்பட், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.

