நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உள்நாட்டு இன கால்நடைகள் பாதுகாத்தல் மற்றும் இன விறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 21
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உள்நாட்டு இன கால்நடைகள் பாதுகாத்தல் மற்றும் இன விறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் உம்பளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உப்பளப்புல் எனும் ஒரு வகை புல் பிரசித்தி பெற்றவையாகும். இப்புற்களில் உப்புச்சத்து அதிகமாக இருக்கும். இந்த புல்வகையை மேய்ந்து இம்மாட்டினம் விருத்தி அடைந்தததால் இம்மாட்டிற்க்கு உம்பளச்சேரி மாடு வகையினம் எனப்பெயர் வந்ததது. இம்மாட்டினங்கள் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது. உம்பளச்சேரி எருதுகள் சேர் நிறைந்த சதுப்பு நிலங்களில் தொடர்ந்து ஆறு மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது. குறைந்த உடல் எடையும் மெல்லிய ஆனால் வலுவலான கால்களும் சேற்றில் நடப்பதற்கு எளிதாக உதவிபுரிகின்றன. சேற்று உழவில் மற்ற இன மாடுகளை விட வேகமாக செல்லும். கடுமையான மழை மற்றும் வெயிலை தாங்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாடு இனமாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக மாடு கன்று பராமரித்து வரும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் பரிசுகளை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர்.சங்சீவ்ராஜ் உதவி இயக்குநர்கள் டாக்டர்.ஹசன் இப்ராஹிம் டாக்டர்.விஜயகுமார் தலைஞாயிறு ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.ஜி.தமிழரசிதலைஞாயிறு ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜெகதீசன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உட்பட பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

