நாகப்பட்டினம் மாவட்டம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின்வார சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழாவையொட்டி மின்சார சேமிப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நாகப்பட்டினம் டிசம்பர் 20
நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின்வார சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழாவையொட்டி மின்சார சேமிப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மின்வார சிக்கனம் மற்றும் சேமிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து தெரிவித்ததவாது,
மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழா 14.12.2022 அன்று தொடங்கி 20.12.2022 வரை நடைபெறுகிறது. அதனையொட்டி இன்றைய தினம் மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொது மக்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட மின்சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத நேரத்தில் யாரும் இல்லாத அறைகளில் மின் விளக்குகளை நிறுத்த வேண்டும். சாதாரண குண்டு விளக்குகளுக்கு பதில் முடிந்த வரை எல்.இ.டி விளக்குகள் அல்வது சி.எப்.எல் விளக்குகளை பயன்படுத்த வேண்டும். செல் சார்ஜர்களை எப்போதும் இணைப்பில் வைக்ககூடாது. வணிகர்கள் தேவையின்றி ஆடம்பர விளக்குகளை பயன்படுத்த கூடாது. எல்.இ.டி விளக்குகளை பயன்படுத்தினால் மின் கட்டணம் குறையும். தொழிற்சாலைகளில் சரியான திறன் கொண்ட நட்சத்திர குறியீடு உள்ள மின் மோட்டார்களை பயன்படுத்தினால் மின் நுகர்வு குறையும். விவசாயிகள் நட்சத்திர குறியீடு கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்துங்கள் என தெரிவித்தார்.


இப்பேரணியானது அவுரித்திடலில் தொடங்கி ஏழை பிள்ளையார் கோவில் வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்ததது. இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் மின்சார வாரிய மேற்பார்வையாளர் ஆர்.சசிதரன், செயற்பொறியாளர்(நாகப்பட்டினம்) சேகர், செயற்பொறியாளர்(பொது) ரோனிக்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

