• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னையில் கிறிஸ்துமஸ் விழா: சிறுபாண்மையினரின் நலனுக்காக அதிமுக என்றும் துணை நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு

policeseithitv by policeseithitv
December 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னையில் கிறிஸ்துமஸ் விழா: சிறுபாண்மையினரின் நலனுக்காக அதிமுக என்றும் துணை நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை வானகரம் ஜீசஸ் கால்ஸ் வளாக கன்வென்ஷன் மையத்தில் 19.12.2022 அன்று நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தென்னிந்திய திருச்சபை முன்னாள் பிரதம பேராயர் ஜி.தேவகடாட்சம், பாதிரியார்கள் ஸ்டான்லி செபாஸ்டியன், எஸ்.ராஜாசிங், இந்திய சுவிசேஷ திருச்சபை பாதிரியார்கள் எஸ்.ராபின் ராஜ்குமார், ஜே.சார்லஸ் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளைச் சார்ந்த ஏ.சி.சண்முகம், க.கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ, என்.ஆர்.தனபாலன் பங்கேற்றனர்.
சிறுபான்மை மக்களின் நலனுக்காக என்றும் துணை நிற்கும் உண்மையான இயக்கமாக அதிமுக இருப்பதாக, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா, சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று, கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: புனித ஏசுபிரானின் அவதாரத்தை கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அனைத்து மக்களுக்கும், குறிப்பாக கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் எம்ஜிஆர்தான் கிறிஸ்தவர்களை பிற்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தினார். ஜெயலலிதா ஆட்சியில் கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான ஜெருசலேம் சென்றுவர கிறிஸ்தவர்களுக்கு, தமிழக அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
கிறிஸ்தவ பெருமக்களை கவுரவிக்கும் விதமாக அதிமுக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த பாசப் பிணைப்பை எக்காலத்திலும் பிரிக்க இயலாது. இனி வரும் காலங்களில் இந்த பாசமும், நேசமும் வலுப்பெறும். சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு இயக்கமாக அதிமுக என்றென்றும் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.


அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் வரவேற்புரையாற்றி பேசுகையில்: சிறுபாண்மை மக்களின் உற்ற தோழனாக, இருந்து மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அண்ணன் எடப்பாடியார் அவர்களும் அனைவரையும் அரவணைத்து செல்கிறார். சிறுபாண்மை மக்களுக்கு எல்லா விதத்திலும் பல நன்மைகளை செய்து கொடுத்த கட்சி அதிமுக. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த சிறுபாண்மை மக்களும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும். தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமைக்க இன்னாளில் சபதம் ஏற்போம் என்றார்.
நிகழ்ச்சியில், சென்னை உயர் மறை மாவட்ட விகார் ஜெனரல் ஸ்டேன்லி செபாஸ்டியன், இந்திய சுவிசேஷ திருச்சபையைச் சேர்ந்த ராபின் ராஜ்குமார், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பிரதம பேராயர் ஜி.தேவகடாட்சம், புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமாகா பொதுச் செயலாளர் விடியல் சேகர் சிறுபான்மையினர் நல ஆணைய முன்னாள் தலைவர் ஜான் மகேந்திரன், மாநில அமைப்பு செயலாளரும், திருவள்ளுவர் மத்திய மாவட்ட செயலாளருமான பெஞ்சமின், மாநில எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் ஆறுமுகநயினார், பேச்சாளர் கருணாநிதி, ஜெ.பேரவை இணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், மகளிர் அணி துணைச் செயலாளர் ஞானபுஷ்பம், வட்டச் செயலாளர்கள் ராஜா துரைசிங், கூட்டுறவு வங்கி இயக்குநர் அன்புலிங்கம், நிர்வாகிகள் சங்கர், பேச்சிமுத்து, கருப்பசாமி, சுடலைமுத்து, ஐயப்பன், சாந்தா, கெய்னஸ், மனோகர், கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. 

Next Post

மாப்பிள்ளையூரணி வளர்ச்சிக்கு உதவி வேண்டி கலெக்டரிடம் கோரிக்கை தீர்மானம் சரவணக்குமார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

Next Post
மாப்பிள்ளையூரணி வளர்ச்சிக்கு உதவி வேண்டி கலெக்டரிடம் கோரிக்கை தீர்மானம் சரவணக்குமார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

மாப்பிள்ளையூரணி வளர்ச்சிக்கு உதவி வேண்டி கலெக்டரிடம் கோரிக்கை தீர்மானம் சரவணக்குமார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In