நாகப்பட்டினம் டிசம்பர் 19
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 247 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் வட்டம், ப.கெந்தகை கிராமத்தை சேர்ந்த செல்வி உம்முல் ஹஸனா த/பெ ஹாஜா நஜிபுதீன் என்ற மாற்றுத்திறனாளிக்கு மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலியினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவர்கள் தங்கும் விடுதியில் மாவட்ட அளவில் சிறப்பாக பணிபுரிந்த 3 காப்பாளினிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் மற்றும் ஊக்கத் தொகைக்கான காசோலையினையும், சமூக ஆர்வலர் ரஜினிகாந்த் அவர்கள் சார்பில் நாகப்பட்டினம் நகராட்சி சம்பாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு ரூ.22,700 மதிப்பீட்டிலான உபயோகப் பொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும்அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

