தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி உள்ளிட்ட அனைத்து அணியினரும் திமுகவின் சாதனைகளை வீடுதோறும் எடுத்துச்சென்று மக்கள் பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். அதே போல் மாநில இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் விளையாட்டுதுறை மற்றும் சிறப்பு செயலாக்க திட்டத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிக அளவில் உறுப்பினர் சேர்க்கையை இளைஞர் அணியினர் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலின் போது இளைஞர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் தக்க சமயத்தில் வழங்கப்படும். என்று கூறியுள்ளார். அதனடிப்படையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் ஆலோசனை படி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிளைச்செயலாளர்கள் காமராஜ், நெல்சன், செல்வம், பொன்னுச்சாமி, சந்திரசேகர், பிரபாகர், ஜெகன், முத்துராஜ், சிவபெருமாள், குரூஸ்மணி, முருகன், மூர்த்தி, வேல்ராஜ், உத்திரம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணிதனுஷ்பாலன், தொம்மை சேவியர், மற்றும் நிர்வாகிகள் இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின் செய்திருந்தார்.

