தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள திரேஸ்நகரில்; கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. சவேரியார்புரம் பங்குதந்தை குழந்தைராஜன் தலைமை வகித்தார். கிறிஸ்துமஸ் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், கிறிஸ்துவ கீத ஆராதனைகள், இயேசுவின் பிறப்பு குறித்த நிகழ்வுகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை வழங்கி பேசுகையில்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல ஒழுக்கத்துடன் குழந்தை செல்வங்கள் படிக்க வேண்டும். மதத்தை மதிப்போம், மனித நேயத்தை வளர்ப்போம். ஒற்றுமையை பேணி பாதுகாப்போம். மக்கள் நலன் ஒன்றே தான் முக்கியம் என்று பணியாற்றுவோம் என்று பேசினார்.


விழாவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, திமுக கிளைச்செயலாளர்கள் காமராஜ், பிரபாகர், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், திமுக நிர்வாகிகள் ராயப்பன், ஆனந்;த், கௌதம், மகளிர் அணி ரூபி, மற்றும் அருட் சகோதரிகள் சவேரியார்புரம் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

