தூத்துக்குடி தமிழ்நாடு ஓய்வூதியகர்கள் சங்கம் சார்பில் காவல்துறை மாநகராட்சி அரசுத்துறை ஓய்வு பெற்ற நலச்சங்கம் இணைந்து நடத்திய ஓய்வூதியர்கள் தினவிழா நிகழ்ச்சி சிஎம் ஆரம்பபள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பிதேலிஸ் வல்தாரிஸ் தலைமை வகித்தார். மாநகராட்சி மற்றும் நகராட்சி ஒய்வூதியர்கள் சங்க தலைவர் மாடசாமி, காவல்துறை ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க தலைவர் சங்கரலிங்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர்கள் சங்க துணைத்தலைவர் அந்தோணிசாமி வரவேற்புரையாற்றினார். ஓய்வூ பெற்ற காவல்துறை கீதாசெல்வமாரியப்பன், வருவாய்துறை பிச்சையா கர்டோசா, நகராட்சி குமரகுரு, ஆகியோர் சிறப்புரையாற்றுகையில் அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு உள்ள முழு பலன்களையும் அரசு முழுமையாக வழங்க வேண்டும். அதில் ஏதுவும் குறைபாடுகள் இருந்தால் கருவூல துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு அந்த பலனை பெற்றுக் கொள்ள வேண்டும். மாநகராட்சி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான குறைபாடுகள் தீர்க்கப்படாமல் உள்ளது. அதை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும். நமது மாவட்டத்திலுள்ள குறைபாடுகள் கோரிக்கைகள் ஏதுவாக இருந்தாலும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை நேரில் அனுகி கோரிக்கைகளை தீர்த்து கொள்ளவது என்று ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பேசினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் பால்ராஜ், சண்முகவேல், மேரியம்மாள், ஜவஹர்லால் நேரு, செயலாளர் ஐயம்பிள்ளை, பொருளாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் அல்போன்ஸம்மாள், நயினார், செயற்குழு உறுப்பினர் முகமது சுல்தான் சாகிப், மற்றும் குமரேசன், உள்பட அனைத்து துறை ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்பு செயலாளர் ஆனந்தன் நன்றியுரையாற்றினார்.

