• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மஹாதேவ காலமஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு வரும் 16ம் தேதி ஸ்ரீசித்தர் பீடத்தில் 64வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

policeseithitv by policeseithitv
December 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மஹாதேவ காலமஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு வரும் 16ம் தேதி ஸ்ரீசித்தர் பீடத்தில் 64வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் மற்றும் விநாயகர், குருமகாலிங்கேஸ்வரர், சனீஸ்வரர், ஆஞ்சநேயர், வராகி அம்மன் ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர்.

ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 16ம் தேதி(வெள்ளிக்கிழமை) பைரவரின் பிறந்த தினமான மஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெறவுள்ளது.

மஹாதேவ காலபைரவாஷ்டமி என்பது காலபைரவர் பிறந்த தினமாகும். மஹா காலபைரவர் பிறந்த தினமான இந்நாளில் அவரை மனம் உருக வணங்கினால் வேண்டும் வரங்கள் யாவும் கிடைத்திடும், வாழ்வில் கடன் தொல்லைகள் யாவும் நீங்கி செல்வங்கள் பெருகிடும், தொழில் மேம்படும் என்பது ஐதீகமாகும்.

இதன்படி மஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் அன்பு-அமைதி நிலவவேண்டியும், இந்தியாவில் இயற்கை சீற்றங்கள் இல்லாத நிலைவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவேண்டியும், நோய், நொடிகள், கடன் தொல்லைகள் இல்லாமல் செல்வங்கள் பெருகி வளமாக நலமாக வாழவேண்டியும் ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

சிறப்பு வழிபாடுகள் காலை 8.45மணிக்கு விநாயகர் வழிபாடும், 9மணிக்கு கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜையும், காலை 10மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவ-காலபைரவர் ஹோமமும் நடக்கிறது. தொடர்ந்து, காலை 10.30மணிக்கு மஹா காலபைரவருக்கு பால், பழம், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, குங்கும், நெல், அன்னம், சங்கு, ருத்திராட்சம், தாமரை, புனுகு, அருகம்புல், மலர்கள் உள்ளிட்ட 64 வகையான சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து, மதியம் 12மணிக்கு ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பலவகையான மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனையுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மதியம் 1மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4.30மணிக்கு காலபைரவர் மஹா யாக வழிபாடுகள் தீபாரதனையுடன் நிறைவடைகிறது.

சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் வழிபாட்டுக் குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

Next Post

திருச்செந்தூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் ராமஜெயம் துவக்கி வைத்தார். 

Next Post
திருச்செந்தூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் ராமஜெயம் துவக்கி வைத்தார். 

திருச்செந்தூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் ராமஜெயம் துவக்கி வைத்தார். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In