நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் டிசம்பர் 13 நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி
மேலாண்மை குழு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கீழையூர், தலைஞாயிறு ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு பயிற்சி இன்று நடைபெறுகிறது. இப்பயிற்சியானது அரசு பள்ளிகளை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்தவும் பயன்படும். மேலும், பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் தவறான வழியில் செல்கிறார்களா, மாணவர்கள் படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்துகிறார்களா, மாணவ,மாணவிகள் பாலியியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்த படுகிறார்களா எனவும் கண்காணிக்கும் பொறுப்பு அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் உள்ளது. மேலும், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் அந்தந்த ஊராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களின் நலனை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இப்பயிற்சியின் போது கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , கீழையூர், தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

