நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டரங்கில் 2022ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 15.12.2022 அன்று மாவட்ட அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அழைப்பு
செவித்திறன் பாதிக்கப்பட்ட 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி ஆண்கள் பெண்கள் 100மீ ஓட்டபந்தயம், மற்றும்; நீளம் தாண்டுதல் போட்டிகளிலும், 15 வயது முதல் 17 வயதுவரை உள்ளவர்கள் 200 மீ ஓட்டபந்தயத்திலும், குண்டு எறிதல் போட்டியிலும், 17 வயதுக்கு மேற்பபட்ட ஆண்கள் பெண்கள் 400மீ ஓட்டபந்தயம் தொடர் ஓட்டபந்தயத்திலும் கலந்துகொள்ளலாம். முற்றிலும் பார்வைத்;திறன் பாதிக்கப்பட்ட 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாற்றுத்;திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் நின்று நீளம் தாண்டுதல். பார்வைக் குறைபாடுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் 100மீ, 50மீ ஓட்டபந்தயம், நின்று நீளம் தாண்டுதல் போட்டிகளிலும் 15 வயது முதல் 17 வயதுவரை முற்றிலும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் குண்டு எறிதல்இ பார்வைக் குறைபாடுடையோர் 100மீ ஓட்டபந்தயம் போன்றவற்றில் கலந்துகொள்ளலாம். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வட்டத்தட்டு எறிதல் 100. மீ200 மீ ஓட்டப்பந்தயம். கல்லூரி மாணவர்கள் பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள் 100 மீ ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் கலந்துகொள்ளலாம்.
கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான (நடக்கும் சக்தியற்றவர்கள்) 12 முதல் 14 வயதுவரை உள்ள காலிப்பர் மாற்றும் ஊன்றுகோல் உதவியுடன் நடப்பவர்கள் 50மீ நடைப்போட்டியிலும் 15 வயதுமுதல் 17 வயதுவரை மூன்று சக்கர வண்டி பயன்படுத்தும் ஆண்கள் பெண்கள் 100மீ, 150மீ ஓட்டப்போட்டியிலும் 17 வயதுக்கு மேற்பபட்ட சக்கர நாற்காலி பயன்படுத்தும் ஆண்கள் மற்றும் 75மீ ஒட்ட போட்டியிலும் கலந்துகொள்ளலாம்.
கைகால் பாதிக்கப்பட்டோருக்குhன 12 வயது முதல் 14 வயதுவரை ஆ;ண்கள், பெண்கள் 50மீ ஒட்டபந்தயத்திலும் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் 75மீ, 100;மீ ஓட்டபந்தயம் போட்டியிலும், 17 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் 100;மீ, 200மீ ஓட்டபந்தயத்திலும் கலந்துகொள்ளலாம்.
மனவளர்;ச்சி குன்றியோருக்கான 12 வயதுமுதல் 14 வயதுவரை ஆண்கள், பெண்கள் நின்று நீளம் தாண்டுதல் போட்டியிலும், 15வயதுமுதல் 17 வயதுவரை உள்ள ஆண்கள் பெண்கள் ஓடி நீளம் தாண்டுதல் போட்டீயிலும், 17 வயதிற்கு மேற்பபட்டவர்கள் 100 மீட்டர் ஓட்டபந்தயம் போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.
ஸ்பாஸ்டிக் குந்தைகளுக்கான போட்டிகள் 12 வயதுமுதல் 14 வயதுவரை ஆண்கள், பெண்கள் உருளைக்கிழகு சேகரித்தல், 15 வயதுமுதல் 17 வயதுவரை உள்ள ஆண்கள் பெண்கள் கிரிக்கெட் பந்து எறிதல் மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டோர் தடை தாண்டி ஓடுதல் போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுவான போட்டியாக ஆண்களுக்கு 800மீ மற்றும் பெண்களுக்கு 400மீ ஓட்டப்பந்தயத்திலும் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்து கொள்கிறார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

