நாகப்பட்டினம் டிசம்பர் 12
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 232 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நாகப்பட்டினம் வட்டம் ஏனங்குடி கிராமத்தைச்சேர்ந்த ஹபீப் ஷேக் முகமது தாவுது என்பவர் சவுதி அரேபியா நாட்டில் இறந்ததற்காக இழப்பீட்டு தொகையாக கான காசோலையினை அவரது மனைவியிடமும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் நாகூர் சம்பா தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க திரு.நிஜாமுதின் என்பவருக்கு ஒதுக்கீட்டு ஆணையினையும், வேதாரண்யம் வட்டம் குரவப்புலத்தைச் சேர்ந்த திரு.இளங்கோவன் என்ற மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கான ஆணையினையும், வருவாய்த்துறை சார்பில் வடுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) த.ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

