வேதாரணியம் டிசம்பர் 11 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி வடக்கு கோட்டவரன் காடு பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (வயது 96 ) என்பவரை அவரது மகன் சந்திரசேகரன் (வயது 56) சொத்து பிரச்சனையில் கத்தியால் குத்தினார். கத்தியால் குத்துப்பட்ட கோவிந்தசாமி சம்பவ இடத்திலே இறந்தார். தகவல் அறிந்த வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் எஸ் குணசேகரன் தலைமையில் சென்ற காவல்துறையினர் தப்பி ஓடிய சந்திரசேகரனை
கைது செய்து
விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரணியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
குற்றம் நடந்து இரண்டு மணி நேரத்திற்குள் குற்றவாளியை
கைது செய்த வேதாரணியம்
காவல்துறை ஆய்வாளர் எஸ் குணசேகரன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினரை
வேதாரணியம் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

