தூத்துக்குடி புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி ஊராட்;சி அலுவலர் நாகராஜ் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன் வரவேற்புரையாற்றினார்.
தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கி பேசுகையில் முதலமைச்சர் ஸ்டாலின் எல்லா துறைகளும் வளர்ச்சியடைய வேண்டும் என்று உழைக்கின்றார். மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகின்ற ஊட்டசத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும். அதற்காக இந்த ஊட்டசத்து வழங்கப்படுகிறது. முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் மூலம் 12ஆயிரம் வழங்கப்படுகிறது. குழந்தை பெற்றெடுத்தபின் மருத்துவ பெட்டகம் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் உதவியின் மூலம் கர்ப்பிணி பெண்களை ஆரம்பகட்டத்திலிருந்து ஆரம்ப சுகாதார செவிலியர்கள் குழந்தை வளர்ச்சி தாயின் ஆரோக்கியம் அனைத்தையும் கண்காணித்து பாதுகாத்து வருகின்றன. பெண்கள் வளர்ச்சியில் முதலமைச்சர் தனிக்கவணம் செலுத்தி வருகிறார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சூழல்நிதி மற்றும் சமுதாய தொழில்நிதி ஒன்றைலட்சம் வழங்கப்படுகிறது. உங்களுடைய வாழ்வாதாரத்தை எல்லா வகையிலும் உயர்த்தும் வகையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மாநகர பேருந்தில் இலவச பயணம் அரசு பள்ளியில் படித்து முடித்து கல்லூரி செல்லும் போது ஆயிரம் உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். என்பது தான் திராவிட மாடல் ஆட்சி எல்லாத்துறைகளிலும் பெண்கள் வரவேண்டும் என்ற பேசினார்.
விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் ஊராட்சி ஓன்றிய குழு தலைவரும் கூட்டுறவு வங்கி தலைவருமான விபிஆர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், சுதாகர், தலைமை செயற்குழு உறுப்பினர் மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், செந்தில், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சுரேஷ்காந்தி, ராமசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் ஆறுமுகம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், செல்வக்குமார், தர்மராஜ், பூபேஸ்நாதன், கோபால், நெல்சன், நாகராஜன், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவகுமார், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோனிதனுஷ்பாலன், முத்துமாலை மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வஉசி சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார்.
சுகாதாரா துறை இணை இயக்குநர் பொற்செல்வன், நன்றியுரையாற்றினார்.

