நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக நாகூர் பட்டினச்சேரியில் உள்ள பல்நோக்கு இயற்கை பேரிடர் பாதுகாப்பு மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 8 நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக நாகூர் பட்டினச்சேரியில் உள்ள பல்நோக்கு இயற்கை பேரிடர் பாதுகாப்பு மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணத்தினால், மழை குறைந்த அளவு இருந்தாலும், கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதையும், கடல் அலை சீற்றத்தினால் மண்ணரிப்பு மற்றும் குடிசைப் பகுதிகள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன. நாம் இதற்கு முன்னேற்பாடாகவே இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நாகூர் பட்டினச்சேரியில் உள்ள பல்நோக்கு இயற்கை பேரிடர் பாதுகாப்பு மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற இலவச சிறப்பு வெளி மருத்துவ முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க கடலோர கறைகளில் மண்ணரிப்பை தடுப்பதற்காக கல் அமைக்கும் பணி நடைபெறுவதற்கு தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் தாழ்வானப் பகுதிகளில் உள்ள பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு, மருத்துவம் போன்றவைகளை தேவையான அளவு தயார் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது நாகப்பட்டினம் வட்டாட்சியர் கார்த்திகேயன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

