நாகப்பட்டினம் மாவட்டத்தில் விழா மூலம் நியாயவிலைக்கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 8
நாகப்பட்டினம் மாவட்டத்தில் விழா மூலம் நியாயவிலைக்கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாரபொது விநியோகத்திட்டம், மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது மாநில மற்றும் மத்திய அரசின் உயர்மட்ட அலுவலர்களால் விழா மூலம் நாடு முழுவதும் சுமார் 5000 நியாயவிலைக்கடைகளை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.இவ்விழா மூலம் நியாய விலைக்கடைகளின் தெரிவு நிலையை கணிசமாக மேம்படுத்துவது பொது விநியோகத்திட்ட செயல்பாடுகளின் தரைமட்ட உண்மைகளை உயர்மட்ட அலுவலர்களுக்கு உணர்த்துவது, அத்துடன் போன்ற திட்டங்களின் நிலையை முழுமையாக கண்காணித்திடவும், மேலும் இப்பொருள் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த பட்சம் 5 முதல் 6 நியாய விலைக்கடைகளை உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் வழங்கப்பட்ட பட்டியல் விவரத்தின்படி நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்யப்பட வேண்டும்
அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தெற்கு பால்பண்ணைச்சேரி மற்றும் வ.உ.சி. தெருவில் உள்ள நியாயவிலைக்கடைகளிலும், கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்தில் தேவூர் மற்றும் வெண்மணி ஆகிய ஊராட்சிகளில் உள்ள நியாய விலைக்கடைகளிலும், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் உள்ள நியாய விலைக்கடையிலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் போதுமான இருப்பு குறித்து விழா மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கீழ்வேளுர் வட்டாட்சியர் ரமேஷ், திருக்குவளை வட்டாட்சியர் இராஜ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் இளமதி, நாகப்பட்டினம் வட்ட வழங்கல் அலுவலர் யசோதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை
மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

