நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரக்கோணம் 4 ஆவது தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து 25 வீரர்கள் கொண்ட மீட்பு குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் சந்தித்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 7
நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்போது கனமழை எச்சரிக்கை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அரக்கோணம் 4 ஆவது தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து 25 வீரர்கள் கொண்ட மீட்பு குழுவினர் பணியமர்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் சந்தித்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது.
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்தம் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் வருகின்ற 08.12.2022 மற்றும் 09.12.2022 ஆகிய நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை முன்னறிவிப்பு வரப்பெற்றுள்ளதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அரக்கோணம் 4 ஆவது தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து 25 வீரர்கள் கொண்ட மீட்பு குழுவினர் நம் மாவட்டத்திற்கு பணியமர்தப்பட்டுள்ளார்கள்.

மேற்படி வானிலை அறிக்கையினை தொடர்ந்து நம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரக்கால 24*7 கட்டுப்பாட்டு அறை மையத்தில் 04365-1077 கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கிவருகிறது. இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இயற்கை இடர்பாடு மற்றும் தமிழ்நாடு மின்சாரவாரியம் தொடர்பான தேவைகள் குறித்தும் அவசரகால மையத்தில் தரைவழி தொலைபேசி (டுயனெடiநெ) 04365-251992 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். மேலும், 8438669800 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் குறுஞ்செய்தியும் அனுப்பிடலாம் எனவும், பொது மக்கள் மற்றும் மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

