நாகப்பட்டினம் மாவட்டம்
மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 05 நாகப்பட்டினம் மாவட்டம் மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியை நாகப்பட்டினம் அவுரித்திடலிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ், இன்று துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரமானது கடந்த 25.11.2022 சர்வதேச பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஒழிப்பு தினத்திலிருந்து, எதிர்வரும் சர்வதேச ஒற்றுமை தினமான 23.12.2022 அன்றுவரை நடைபெற்று வருகிறது.
இப்பேரணியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலிருந்தும் தலா ஒருவர் வீதம் 193 சமுதாய வள பயிற்றுநர்கள் மற்றும் நகர்புற, ஊரக மகளிர் திட்ட பணியாளர்களும் சேர்த்து 250 நபர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியின்போது பெண்களுக்கெதிரான வன்முறை தடுப்பு, பெண் கல்வி, பெண் உரிமை, பெண்களுக்கு சம வாய்ப்பு அளித்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் முறை ஓழித்தல் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணி நாகப்பட்டினம் அவுரித்திடலிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தது.

இப்பேரணியை உதவி திட்ட அலுவலர் ஆர்.முருசேகன், அனைத்து உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட வள பயிற்றுநர், வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் மகளிர் திட்ட பணியாளர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

