நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ. அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் டிசம்பர் 3 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ. அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவர்களின் வழிகாட்டியாகவும், அவர்களை ஊக்கப்படுத்த வகையிலும் செயல்பட வேண்டும். மாணவர்களை நல்ல அறிவிற் சிறந்தவராகவும், மாணவர்களின் எதிர்காலத்தையும் உருவாக்குகிற கடமை மற்றும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. மாணவர்கள் தவறான வழியில் செல்வதை தடுத்து அவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியரிடம் மட்டுமே உள்ளது. ஆகவே ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை நல்வழியில் நடத்த மென்மேலும் பாடுபட வேண்டும் எனவும்,


போட்டித்தேர்வில் பங்கேற்க மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்களை பிற மாணவர்களுடன் ஒப்பிடுதலை தவிர்த்திட வேண்டும். மேலும், வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிட வேண்டுமென ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மாநில அளவில் நடைபெற்ற தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் முதலிடம் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆயக்காரன்புலம் ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயிலும் கு..அபிநயா எனும் மாணவியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாழ்த்தி, நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மென்மேலும் வளரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி மாவட்ட கல்வி அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

