நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 3 நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ம.பிரதிவிராஜ் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கலந்துகொண்டார்.


பின்னர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது, இளைஞர் திறன் திருவிழாவானது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா தமிழக அரசால் நடத்தப்படுகிறது. இதன் நோக்கம் இளைஞர்கள் மத்தியில் திறன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தகுதியான வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில் செய்வதற்கு வழிவகை ஏற்படுத்தி தருவதாகும்.
அதனடிப்படையில் இளைஞர் திறன் திருவிழா நம் மாவட்டத்தில் முதல் கட்டமாக நாகப்பட்டினம் வட்டாரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அவற்றில் கலந்து கொண்ட 535 இளைஞர்களில் 279 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திடவும், இரண்டாம் கட்டமாக கீழ்வேளூர் வட்டாரத்தில் நடத்தப்பட்டதில் கலந்து கொண்ட 520 இளைஞர்களின் 213 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திடவும் 11 பயிற்சி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மூன்றாம் கட்டமாக தலைஞாயிறு பேரூராட்சி மண்டபத்தில் நடைபெற்றதில் கலந்து கொண்ட 603 இளைஞர்களில் 246 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திட 14 பயிற்சி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் 14 பயிற்சி நிறுவனங்கள் வருகை தந்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. பயிற்சியை முடித்து வேலைக்கு செல்வோர்கள் தங்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது என எண்ணாமல் கொடுக்கப்பட்ட பணியினை சிறப்பாக பார்த்தால் மேலும் நம் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.
நமது மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் வரை 2600 இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 1820 நபர்களும், திட்டத்தின் மூலம் 7822 நபர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களில் 5662 நபர்களும் வேலைவாய்ப்பினை பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட 496 இளைஞர்களில்; 168 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திடவும் 14 பயிற்சி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர். திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் சார்பில் இணையத்தள பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும், பணி ஆணையினையும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.91.35 இலட்சம் மதிப்பீட்டிலான வங்கி நேரடி கடன் தொகைக்கான ஆணை மற்றும் வேளாண் தொகுப்பு மையத்திற்கு ரூ.8.72 இலட்சம் மதிப்பீட்டிலான காசோலையினையும் மாவட்ட ஆட்சிதலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலர்கள் இரா. முருகேசன், பா.பாலன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

