நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்
தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ்
இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 3
நாகப்பட்;டினம் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் டிசம்பர் மாதத்திற்கு 27140 மெ. டன் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது 1573 மெ.டன் யூரியா, 110 மெ.டன் டி.ஏபி, 353 மெ.டன் பொட்டாஷ், 876 மெ.டன் காம்ப்ளக்ஸ், உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இவைகளை தேவையின் அடிப்படையில் இரயில் மூலமாகவும், சாலை மார்க்கமாகவும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதனை பயன்படுத்தி விவசாயிகள் உரம் பெற்று சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் ஜாக்குல அக்கண்டராவ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை எஸ்.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

