வேதாரணியம் ஒன்றிய வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 30 ஆம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.
வேதாரணியம் டிசம்பர் 2
நாகை மாவட்ட அளவிலான முப்பதாவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வேதாரணியம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் S.M.ஆரிப் தலைமை தாங்கினார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால. சுரேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டு கல்விசார் ஒருங்கிணைப்பாளர் M.முத்துவேல் மாநாட்டு அறிமுக உரையாற்றினார். மாநாட்டிற்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வேதாரணியம் வட்டார கல்வி அலுவலர் ஆகியோ ர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். மாநாட்டில் வேதாரணியம் தலைஞாயிறு கீழையூர் கீழ்வேளூர் நாகப்பட்டினம் திருமுருகன் ஒன்றியங்களில் இருந்து 145 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன அவற்றிலிருந்து 15 கட்டுரைகள் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன .மறைந்த அறிவியலுக்கு முன்னோடி ஆசிரியர் சிங்காரவேலு நினைவாக சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் சிறப்பிடம் பெற்ற கட்டுரையை செய்த மாணவர்களுக்கு உள்ளூர் விஞ்ஞானி என்ற விருது நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கும்,குழந்தை விஞ்ஞானிகளுக்கும்
சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி பாராட்டி பேசினார்.


நிகழ்ச்சியில் வேதாரணியம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் வட்டாட்சியர் ஜெயசீலன் அறிவியல் இயக்கம் மாநில செயலாளர் M.S.ஸ்டீபன் நாதன் மாவட்ட செயலாளர் இரணியன் ஒன்றிய தலைவர் சித்திரவேலு மேலும் அறிவியல் இயக்க மாநில மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஆசிரியை வசந்தா சித்திரவேல் மதிய உணவு வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் சத்தியராஜ் ஆசிரியர்கள் அரசுமணி பாலசுப்ரமணியன் ஆனந்தம்முருகு, திருமாவளவன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர் இறுதியாக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் நன்றிகளை கூறினார் .
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

