நாகப்பட்டினம் டிசம்பர் 2
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளை விற்பனை தொடக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி நகர மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது .மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களுக்கு அரசு செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும்; எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் மக்களைத் தேடி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகள், சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள், சூப்பர் மார்க்கெட்கள் மூலம் 5 கி.கி எடை கொண்ட எரிவாயு உருளைகள் விற்பனை திட்டம் தொடங்கி செயல்ப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து நம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம் பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் நடத்தப்படும் நியாய விலை கடையில் இந்த சிறப்பு திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள், சிறு வியாபாரிகள் எவ்வித முன்பதிவுமின்றி இந்த 5 கி.கி எடையுள்ள எரிவாயு உருளையை ரூ.1499 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். எரிவாயு தீர்ந்த காலி உருளையினை திரும்ப கொடுத்து ரூ.555 தொகையை செலுத்தி புதிய எரிவாயு உருளை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப காலியான எரிவாயு உருளையினை எந்த இடத்திலும் (பெட்ரோல் பங்குகள், வெளிமாவட்டங்களிலும்) கொடுத்து புதிய எரிவாயு நிரப்பப்பட்ட உருளையினை எரிவாயுக்கான தொகையை மட்டும் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். இதற்கு எவ்வித ஆவணங்களும் கொடுக்க தேவையில்லை எனவும், மேலும் இன்றைய அன்றாட வாழ்க்கையில் சமையல் எரிவாயு என்பது அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக உள்ளது. அதனால் அதன் அவசியத்தை உணர்ந்து சமையல் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்தி பொதுமக்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் த?க.பா.அருளரசு, சரக துணை பதிவாளர் முகமது நாசர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

