மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வானவில் மன்றம் என்ற புதிய திட்டத்தினை இன்று தொடங்கி வைக்கப்பட்டதனை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டம் செயல்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் நவம்பர் 28 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வானவில் மன்றம் என்ற புதிய திட்டத்தினை இன்று தொடங்கி வைக்கப்பட்டதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டம் செயல்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 13210 பள்ளிகளில் இன்று முதல் வானவில் மன்றம் துவங்கப்பட வேண்டும் என்ற உத்திரவிற்கிணங்க இன்று முதல் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் துவங்கப்பட்டது, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியே வானவில் மன்றமாகும்.
வானவில் மன்றத்தின் தொடக்கமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பறைகளுக்குள் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடர்பான அறிவியல் மற்றும் கணித பரிசோதனைகளை செய்வதற்கு குறைந்த விலையில் பொருட்களை வாங்க ஒரு பள்ளிக்கு முதற்கட்டமாக ரூ.1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், ஆசிரியர்கள் தானே சோதனைகள் செய்து காட்டி, மாணவர்களையும் சோதனைகளை செய்ய ஆர்வமூட்ட வேண்டும், ஒவ்வொரு வாரமும் பாடத்துடன் தொடர்புடைய கருத்துக்களை விளக்குவதற்கு ஏற்ப பொருள்களை குறைந்த விலையில் வாங்கி பல்வேறு சோதனைகளை செய்து காட்ட வேண்டும். குழந்தைகளை கேள்விகளை கேட்க ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் சோதனை செய்யும் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் கேட்கும் ஆர்வமுள்ள கேள்விகளுடன் பரிசோதனைகளின் ஆவணங்களை பராமரிக்க வேண்டும். கருத்தாளர்கள் பள்ளிக்கு வருகை புரியும்போது அவர்களுடன் இணைந்து பரிசோதனைகளை செய்து காட்டவும், மற்றும் வானவில் மன்றத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும். அறிவியல் நிறுவனங்களுக்கு களப்பயணம் ஏற்பாடு செய்யப்படும் போது மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், பொதுவாக மாணவர்கள் பள்ளியில் பாடம் பயில்வதை மட்டும் வழக்கமாக கொள்ளாமல் அறிவியல் பூர்வமாக யோசிக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாடத்தினை படிக்கும் போது மனப்பாடம் செய்து படிப்பதை விட்டுவிட்டு பாடத்தினை புரிந்து பயில வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி மாவட்ட கல்வி அலுவலர், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

