வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
வேதாரணியம் நவம்பர் 28
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தை அடுத்த கருப்பம்புலம்
அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அகரம் மெட்ரிக் பள்ளி கருப்பம்புலம்,
இலக்குவனார் சதுரங்க பயிற்சி மையம் வாய்மேடு, நாகப்பட்டினம் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி 27.11.2022 காலையில்
அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிறுவனர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி..வி. ராஜேந்திரன்
துவக்கி வைத்தார். இந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில் தஞ்சை, பெரம்பலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ,திண்டுக்கல் ,காரைக்கால் ,மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 436 பேர் கலந்து கொண்டனர். போட்டிகள் ஐந்து பிரிவுகளாக பிரித்து நடத்தப்பட்டன 9 வயதுக்குட்பட்டோர்,11 வயதுக்குட்பட்டோர், 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோர் என பிரித்து நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் ஆண் பெண் என மொத்தம் பத்து பிரிவுகளிலும் மாநில அளவில் 100 கோப்பைகளும் நாகப்பட்டினம் மாவட்ட மாணவர்கள் மட்டும் தனியாக 30 கோப்பைகளும் வழங்கப்பட்டன.



இறுதியில் மொத்தம் 230 பேருக்கு கோப்பைகளும், ஷீல்டும் வழங்கப்பட்டன.
மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற அனைவருக்கும்
பள்ளி தாளாளர் மகேஸ்வரி விவேக் வெங்கட்ராமன், வேதநாயகி பி. வி .ராஜேந்திரன் பள்ளி முதல்வர் D. வெற்றிச்செல்வி ,மாநில சதுரங்க இணை செயலாளர் ஆர் .கே. பாலகுணசேகரன், மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் S.விஜயன், மாவட்ட சதுரங்க கழக செயலாளர் B.சுந்தர்ராஜ், மாவட்ட சதுரங்க கழக பொருளாளர் கே. அருண்குமார் மாவட்ட இணை செயலாளர் E. மணிமொழி ஆகியோர் பரிசு கோப்பைகளும் ,ஷீல்டுகளும்,சான்றிதழ்களும் வழங்கினர். போட்டியை காண போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமனோர்
வந்திருந்தனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

