திருச்செந்தூர், நவ.27
உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்
திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் எஸ். ஜோயல் சார்பில்
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
அதுபோல் தாய்மார்களுக்கு சேலையும் வழங்கப்பட்டது. இந்த
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி உதயநிதி ஸ்டாலின் மன்ற மாவட்ட செயலாளர் பால்துரை தலைமை வகித்தார். பொருளாளர்
சேக் முகமது , வழக்கறிஞர் ஜான் ஜோசப் , துணைத்தலைவர் நடராஜன் , திருச்செந்தூர் சுரேஷ் , மற்றும் மாவட்ட துணை பொருளாளர் பிரதீப் , மாநகர செயலாளர் ராஜா , விமல்ஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

