நாகப்படடினம் மாவட்டம்
பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாராத்தான் ஓட்டப்பந்தயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் நவம்பர் 27 நாகப்படடினம் மாவட்டம் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாராத்தான் ஓட்டப்பந்தயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ், இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா தொடர்பாக மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை மனி மாராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இந்த மனி மாராத்தான் ஓட்டப்பந்தயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி அவுரித்திடல் வரை நிறைவுபெற்றது. மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பல்துறை அலுவலர்களும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பா.விஜயகுமார், சுகாதாரத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

