நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு
குறித்து 100அடி நீளம், 22 அடி அகலம் கொண்ட விளம்பர பதாகையை கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு மற்றும்
பெண்மையை போற்றுவோம் பெண்மையை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைத்து மாணவ மாணவிகளும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று எடுத்துக் கொண்டனர்.
நாகப்பட்டினம் நவம்பர் 25
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து 100அடி நீளம், 22 அடி அகலம் கொண்ட விளம்பர பதாகையை கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு மற்றும் பெண்மையை போற்றுவோம், பெண்மையை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைத்து மாணவ மாணவிகளும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று எடுத்துக் கொண்டனர்.


நான் இன்று முதல் கீழ்காணும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்.
இந்திய குடிமகன் மற்றும் குடிமகளாகிய நான், சாதி, மதம், இனம், மொழி, சமூக பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து பெண்களையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால், எந்த ஒரு பெண்களையும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்துக் கொள்வேன். எனது கவனத்திற்கு வரும் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன், மேலும் இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இன்றைய பெண்கள் நாட்டின் கண்கள், ஒரு குடும்பம் தலை ஓங்குவது பெண்களால் என உணர்ந்து அவர்கள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தெரிய வந்தால், அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். நான், கல்வி அறிவு இல்லாத பெண் சமுதாயத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கு உண்டான உரிமைகள் மற்றும் சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை அனைத்து மாணவ மாணவிகளும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மகளிர் நலனை கருதிற்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ, மாணவிகள் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக இருக்க வேண்டும். புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற அனைத்து தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள்களை பயன்படுத்தல் மற்றும் செல்போன், இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவது போன்ற தவறான விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நாடு வளர்ச்சி அடைவதில் முழு பங்கு மாணவ மாணவிகளிடம் தான் உள்ளது அதனால் இந்த வயதில் நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம், நல்ல மரியாதை இவையனைத்திலும் சிறப்பாக இருந்து நன்றாக படித்து வாழக்கையில் நல்ல இடத்திற்கு வர வேண்டும்.
மேலும் மாணவர்கள் செல் போன்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் மாணவர்களின் குடும்பத்தை பாதிக்கும். இவை அனைத்தையும் தவிர்த்து படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும்.
போதை பொருட்கள், மேலும், பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் தொடுதலின் அவசியம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்து, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களையும், பெண்களின் விழிப்புணர்வு குறித்த மடிப்பேடு,மற்றும் துண்டு பிரசுரங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

