நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மற்றும் மாவட்ட குடும்ப நல துறை சார்பில் நடைபெற்ற ஆண்களுக்கான நவீன வாசக்டமி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் நவம்பர் 25 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மற்றும் மாவட்ட குடும்ப நல துறை சார்பில் நடைபெற்ற ஆண்களுக்கான நவீன வாசக்டமி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம் என்ற Nளுஏ இரு வார விழா 21.11.2022 முதல் தொடங்கப்பட்டு 04.12.2022 வரை நடைபெற உள்ளதை தொடர்ந்து ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத வாசகிடமி நடத்துவதற்கான விழிப்புணர்வு பிரச்சார செய்யும் வாகனத்தினை விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப நல திட்டம் 1956 முதல் செயல்பட்டு வருகிறது. மேலும்,தழும்பில்லா ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டு தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டு நவீன ஆண் குடும்ப நல கருத்தடை சிகிச்சை மையமாக செயல்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முறை குடும்ப நலத்திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
வாசக்டமி ஆண்களுக்கான உறுதியாகப் பயனளிக்கும் பாதுகாப்பான கருத்தடை முறையாகும், இந்த சிறிய கருத்தடை சிகிச்சைக்கு மூன்று நிமிடங்கள் ஆகும். இதில் பயன் நிச்சயமானது எனினும் தழும்பில்லாத வாசக்டமி என்பது மேம்பட்ட நுட்பமான எளிய பாதுகாப்பான முறையாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.விஜயகுமார், குடும்பநல துணை இயக்குநர், மரு.ஜோஸ்பின் அமுதா, மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் சாந்தி, இணை இயக்குநர் நல பணிகள் மரு.ராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

