நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் நவம்பர் 22
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் படைவீரர் தமிழரசன் என்பவரது மகன் இராணுவத்தில் நிரந்தர படை அலுவலராக பயிற்சி பெற்று வருவதற்கான தொகுப்பு மானியமாக ரூ.1,00,000 க்கான ஒப்பளிப்பு ஆணையினையும், கண்கண்ணாடி நிதியுதவியாக முன்னாள் படைவீரர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்முன்னாள் படைவீரர் மனைவி ரம்யா மற்றும் முன்னாள் படைவீரர் வி.சரவணன் தலா ரூ.4,000 க்கான ஒப்பளிப்பு ஆணையினையும், ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் ஹ.ஆயிஷா பேகம் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக
நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

