நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம் நவ 22 நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர். நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட காளியம்மன்கோவில் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்களின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதையும், கீரக்கொல்லை தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதி குறித்தும், மகாலெட்சுமி நகரில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் குழந்தைகளின் வருகை மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்து குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கல் ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையம் நிலையத்தின் நல வாழ்வு மையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், சிக்கல் ஊராட்சியில் பழுதடைந்து உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை மறு சீரமைப்பு செய்யும் பணியினையும், சிக்கல் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் பொரவச்சேரி ஊராட்சியில் உள்ள புதிய அங்கன்வாடி மையத்தினையும் பார்வையிட்டு குழந்தைகளின் வருகை மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.




இந்த ஆய்வின்போது, நாகப்பட்டினம் உதவி ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவி, மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

