தூத்துக்குடி
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி விளையாட்டு வீரர்கள் மூன்று முறை தொடர் வெற்றி:
தாளாளர் ஏ.பி.சி. வீ சொக்கலிங்கம் , செயலர் சுப்புலட்சுமி ஆகியோர் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினர்.
தூத்துக்குடி நவ, 19
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையான விளையாட்டுப் போட்டிகளில் லட்சுமிபுரம் கல்லூரி ,நெய்யூரில் 31/10/2022 அன்று திறந்தவெளி ஓட்டம் நடைபெற்றது.22 அணியினர் கலந்து கொண்ட இப்போட்டியில்
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி
அணியினர் இரண்டாம் இடம் பெற்றனர். குளித்துறை
ஸ்ரீகுமாரி கல்லூரியில் 03/11/2022 அன்று டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.22 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில்
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி
அணியினர் முதல் இடம் பெற்றனர். அதுபோல் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் 16/11/2022 மற்றும் 17/11/2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் 13 கல்லூரிகள் கலந்து கொண்ட நிலையில்
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி
அணியினர் மீண்டும் முதல் இடம் பிடித்து வெற்றி வாகை சூடினர்.
பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்ற வீராங்கனைகளை
கல்லூரியின் தாளாளர் ஏ.பி.சி. வீ சொக்கலிங்கம் அவர்களும் செயலர் திருமதி சொ .சுப்புலட்சுமி அவர்களும் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினர். கல்லூரி முதல்வர் முனைவர் பா. பால சண்முக தேவி அவர்களும் பாராட்டு தெரிவித்தார்கள். இந்த தொடர் வெற்றிக்கு காரணமான உடற்கல்வி இயக்குனர் முனைவர் ரா. அனிஷ்டா , அவர்களையும் சங்கரன், சத்திய சங்கர், கூடைப்பந்து பயிற்சியாளர்களையும் மற்றும் ஐயம்பெருமாள் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரையும் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வர் வாழ்த்தி சிறப்பித்தனர்.
செய்தி தொகுப்பு போலீஸ் செய்தி நியூஸ்
எம். ஆத்தி முத்து

