வேதாரண்யத்தை அடுத்த தியாகராஜபுரம் செட்டிப்புலம் வயல்வெளிகளில் கொக்கு மடையான் பறவைகளை வளை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்
வேதாரண்யம் நவம்பர் 18
திருச்சிவன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் நாகப்பட்டினம் வன உயிரினக்காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அவர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் தலைமையில் வனவர் ராமதாஸ், வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், இலக்கியா, வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் இன்று காலை தியாகராஜபுரம் செட்டிபுலம் வயல்வெளிகளை தணிக்கை செய்கையில் வயல்வெளியில் மடையான், கொக்கு பறவைகளை வளைவைத்து பிடிக்க முயற்ச்சித்த தியாகராஜபுரம் செட்டிபுலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயதூ 50)த/பெ மணவாளன் – என்பவரை பிடித்து விசாரணை செய்து வனச்சர அலுவலர் பா.அயூப் கான் அவர்களால் வழக்குபதிவு செய்யப்பட்டது , நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அவர்களின் உத்தரவின்படி வனச்சரஅலுவலரால் அபராதமாக இணக்க கட்டணம் ரூ. 15000/ விதிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

