தூத்துக்குடியில் ஏபிசிவி சண்முகம், முரளிதரன் முன்னிலையில் இளைஞர்கள் பலர் காங்கிரஸில் இணைந்தனர்
தூத்துக்குடி மாநகர் பகுதியான லயன்ஸ்டவுன் ஜெய்கர் தலைமையில் மணல்மேடு லயன்ஸ்டவுன் பகுதியை சேர்ந்த 25க்கு மேற்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மாநில துணை தலைவர் ஏபிசிவி சண்முகம், மற்றும் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இனைந்தனர். அவர்களுக்கு மாநில துணை தலைவர் ஏபிசிவி சண்முகம் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். மாநகர தலைவர் முரளிதரன் காங்கிரஸ் உறுப்பினர் அட்டையினை அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது குமார முருகேசன் முன்னாள் மாநகர தலைவர் அருள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு எம். கண்ணன் போலீஸ் செய்தி நியூஸ்

