நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, 167 பயனாளிகளுக்கு ரூ.1,00,03,247 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாகப்பட்டினம் நவம்பர் 9
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, 167 பயனாளிகளுக்கு ரூ.1,00,03,247 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ம.பிரதிவிராஜ் நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 2022 தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் வேலூர் மாவட்ட விளையாட்டரங்கங்களுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கம் என பெயர் மாற்றம் செய்து ஆணை பெறப்பட்டது. தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கம், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களின் கோரிக்கைக்கிணங்க நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் நவீன உடற்பயிற்சி அரங்கம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொகை ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடமாகும். மேலும் நவீன உடற்பயிற்சி அரங்கத்திற்கு தேவையான நவீன உடற்பயிற்சி சாதனங்கள் ரூ 10 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வாங்கி வழங்கப்பட்டு, உடற்பயிற்சி அரங்கத்தில் நிறுவப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு சார்பில் இது போன்ற நவீன உடற்பயிற்சி அரங்கம் அமைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் இந்த நவீன உடற்பயிற்சி அரங்கத்தில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், மன வலிமை பெறும் மாதத்திற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் பயன்பெறுவார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.




மேலும், அதனைத்தொடர்ந்து இந்த விழாவில் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் ரூ.4,50,000 மதிப்பீட்டில் 6 மாற்றுத்திறனாளிக்கு வங்கி கடன் மானியத்திற்கான ஆணையினையும், சுகாதாரத்துறை சார்பில் ரூ.10,000 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும்,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.3,000 மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த லெட்சுமி க/பெ(லேட்) ரஞ்சித்குமார் என்பவருக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையினையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் ரூ.48,000 மதிப்பீட்டில் 48 பயனாளிகளுக்கு கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, முதியோர், மாற்றுத்திறனாளி, முதுலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற உதவி தொகையினையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ரூ.5,47,078 மதிப்பீட்டில் 13 பயனாளிகளுக்கு இரண்டு பெண்குழந்தை வைப்புத்தொகைக்கான ரசீதினையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.17,00,000 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு மளிகை, உணவகம், மர இழைப்பகம் போன்ற தொழில் தொடங்குவதற்கு கடன் உதவிக்கான ஆணையினையும், கூட்டுறவு துறை சார்பில் ரூ.34,93,000 மதிப்பீட்டில் 20 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு, சுயஉதவிக்குழு,தாட்கோ குழு, டாம்கோ போன்ற கடனுக்கான ஆணையினையும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ.6,44,000 மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு பவர் டில்லர் இயந்திரத்தினையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.14,298 மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு ஜிப்சம், ஜிங்க் சல்பேட்,பண்ணைக் கருவிகள் தொகுப்பு, கைத்தெளிப்பான், உளுந்து விதை, உயிர் கட்டுப்பாட்டு காரணி, தென்னைக்கன்று போன்ற நலதிட்ட உதவிகளையும், தோட்டக்கலை துறையின் சார்பில் ரூ.2,70,000 மதிப்பீட்டில் 11 பயனாளிகளுக்கு நிரந்தர கல்தூண் பந்தல், காய்கறி விதைத் தளைகள் போன்றவைகளையும், தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ.7,65,421 மதிப்பீட்டில் 1 பயனாளிகளுக்கு லோடு வாகனத்தினையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் ரூ.18,63,000 மதிப்பீட்டில் 17 பயனாளிகளுக்கு ஆடு வளர்ப்பு மற்றும் வருவாய்துறை சார்பில் ரூ.1,80,000 மதிப்பீட்டில் 9 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் ரூ.1,00,03,247 மதிப்பீட்டில் 167 பயனாளிகளுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் ஒன்றிய குழு தலைவர் வே.அனுசுயா நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் மா.ராஜா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும்; அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

