தூத்துக்குடி,நவ,7
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாள் 60வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேரவை தமிழ்நாடு தேவர் பேரவை ரேக்ளா கமிட்டி சார்பில் டேவிஸ்புரம் மெயின் ரோட்டில் பூஞ்சிட்டு 50 ஜோடி, சிறிய மாடு 33 ஜோடி, கலந்து கொண்ட மாட்டுவண்டி போட்டியை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
சீறிபாய்ந்த மாடுகள் பூஞ்சிட்டு 6 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டி 8 கிலோ மீட்டர் தூரமும் சென்று திரும்பிய முதல் 5 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் வைத்து பரிசுத்தொகையும் கோப்பையும் சண்முகையா எம்.எல்.ஏ ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆகியோர் வழங்கினார்கள். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து மாட்டு வண்டி போட்டியை
பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் தர்மலிங்கம், சிவக்குமார், ஒன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ஹரிபாலகிருஷ்ணன், பொருளாளர் மாரியப்பன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, அழகாபுரி ஊர்தலைவர் வக்கீல் மாடசாமி, கிளைச்செயலாளர் காமராஜ், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட திமுக பிரதிநிதியும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேரவை நிர்வாகியுமான சப்பானிமுத்து, மற்றும் சந்தனகுமார், பொன்ராஜ், சுடலைமணி, சபரிராஜா, முக்காண்டி மணிகண்டன், பாலு, அர்ஜீன், முத்துக்குமார், மாரிச்செல்வம், ஆகியோர் செய்திருந்தனர்.
மாட்டுவண்டி போட்டியயை யொட்டி தாளமுத்துநகர் காவல்துறையினர் சாலையில் இருபுறங்களிலும் காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

