வேதாரணியத்தில் மேலத்தெரு பாரதிய வித்யாலயா பள்ளியில் வேதாரணியம் என்ற பெயர் மாற்ற ஆலோசனைக் கூட்டம்.
வேதாரணியம் நவம்பர் 6
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மேலத்தெரு பாரதிய வித்யாலயா பள்ளியில் வேதாரணியம் என்ற பெயர் மாற்ற ஆலோசனைக் கூட்டம் வேதாரணியம் வர்த்தக சங்கத் தலைவர் எஸ் எஸ் தென்னரசு தலைமையில் நடைபெற்றது .
வேதாரணியம் ஒன்றியத்தை சேர்ந்த 35 பொதுநல அமைப்புகள் கலந்து கொண்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 35 பொதுநல அமைப்புகளும் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள்
1.35 பொது அமைப்புகளும் ஒருமனதாக ஒரே கருத்தாக வேதாரணியம் என்ற வடமொழிப் பெயரை திருமறைக்காடு என்று மாற்ற முழு முயற்சி எடுப்பது

2.தமிழக அரசின் கவனத்திற்கு உரிய வழிகளில் கொண்டு செல்வது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த கோருவது.
3.கோரிக்கைகளுக்காக அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற ஒன்றிய தலைவர்களை சந்திப்பது .
4.கிராம சபை நகர சபைகளில் தீர்மானம் நிறைவேற்ற கோருவது
5.இந்த அமைப்பில் மேலும் பல பொதுநல அமைப்புகளை இணைப்பது.
6.தொடர் நடவடிக்கைகளுக்காக அவ்வப்போது கூட்டம் நடத்தி முடிவு எடுப்பது
என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் புயல் குமார், புலவர் சின்னத்துரை மற்றும் 35 பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அரிமா. வீர சுந்தரம் நன்றி கூறினார்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

