நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டத்தில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் தோட்டக்கலை அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் எம். செல்வராசு உடன் உள்ளார்.
நாகப்பட்டினம் நவம்பர் 3
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டத்தில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் தோட்டக்கலை அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ் உடன் உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது. கீழ்வேளூர் வட்டம் குருக்கத்தி கிராமத்தில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்ட வேளாண் தோட்டக்கலை அமைப்பின் முக்கிய நோக்கமாக இக்கல்லூரியில் மரம் நடுதல், மாடித்தோட்டம், மலர் தோட்டம் மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து துவக்கி வைத்தல், மேலும் இந்த அமைப்பு நம் கல்லூரி மாணவர்களால் பராமரிக்கப்பட வேண்டும். இதனால் விடுதி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான இயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் அன்றாட உணவில் சேர்க்கப்பட்டு மாணவர்களின் ஆரோக்கியம் நிலைநிறுத்தப்படும். இந்த அமைப்புகளால் நம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பண்ணை தொழிலாளர்கள் மற்றும் இதர குழுவைச் சார்ந்த நபர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.




இத்திட்டத்தினால் மாணவர்களின் தொழில்நுட்பத் திறன் மேம்படுவதுடன், மாணவர்களை தொழில் முனைவோராக உருவாக்க ஏதுவாகிறது. இந்த அமைப்பில் நம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் உள்நாட்டு காய்கறிகளை சேகரிக்கும் பணியும் நடைபெற உள்ளது. இந்த அமைப்பு ஒவ்வொரு குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும், மாணவர்களின் மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். முன்னதாக வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மரக்கன்று நட்டு வைத்து, மாணவியர் விடுதியில் தோட்டம் அமைக்கப்படவுள்ள மூலிகை செடிகளை பார்வையிட்டு, வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் ஜா.அக்கண்டராவ், தோட்டக்கலை துணை இயக்குநர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ்.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

