நாகை காரைக்கால் மயிலாடுதுறை மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம் கடற்படை கமாண்டர் ஆய்வு
நாகப்பட்டினம் அக்டோபர் 28
நாகப்பட்டினம் நடுக்கடலில் கடற்படையினரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களிடம் கடற்படை கமாண்டர் விசாரணை நடத்தினார்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மேட்டை
சேர்ந்தவர் செல்வம் வயது 37 இவரது விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி தரங்கம்பாடி மற்றும் காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து பதினைந்தாம் தேதி மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 21ஆம் தேதி அதிகாலை சர்வதேச கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதில் வீரவேல் வயது 32 என்பவர் படுகாயம் அடைந்தார் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மற்ற ஒன்பது பேர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான கடற்படை அதிகாரிகள் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள துப்பாக்கி தாக்குதலான விசைப்படையில் ஆய்வு மேற்கண்டனர்.விசைப்படகில் 47 குண்டுகள் துளைத்த ஓட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர் விசைப்படகு உரிமையாளரிடம் விசாரணை நடத்தி படகு சேதம் குறித்து கேட்டறிந்தனர் கடற்படை முகாமில் கடற்படை வீரர்களிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒன்பது மீனவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

