வேதாரணியம் சுற்றுவட்டார கிராமங்களில் நாடோடிகள் மற்றும் மனநலம் குறைந்தவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பள்ளி ஆசிரியை .
வேதாரணியம் அக்டோபர் 24
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு
சுந்தரரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவர் வசந்தா . இவர் பள்ளி வேலை நேரங்களில் தவிர வேதாரண்யம் பகுதிகளில் நிறைய சமூக சேவைகளை ஆற்றுபவர்.
இந்த சமூகப் சேவை பணிகளுக்காக நிறைய விருதுகளை பெற்றிருக்கிறார்.இவர் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை
வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நாடோடிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடன் தனது ஸ்ப்ரிங் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் கொண்டாடி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.அதேபோல் இந்த வருடமும்
வேதாரண்யத்தை அடுத்த அண்டர் காடு, ஆயக்காரன்புலம், வாய்மேடு ,
தாணிக்கோட்டகம் மற்றும் இடும்பாவனம் பகுதிகளில் சாலை ஓரங்களில் தற்காலிக குடிசைகளில் நிரந்தரமாக குடித்தனம் இருந்து வரும்
40 நாடோடி குடும்பங்களைச் சேர்ந்த 125 க்கு மேற்பட்ட ஆடவர் மகளிர் மற்றும் குழந்தைகளுடனும், அதேபோல் வீதிகளிலும் சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் குறைந்த 50 நபர்களுடனும்
தீபாவளியை கொண்டாடினார். இதில் கலந்துகொண்ட நாடோடிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட
அனைவருக்கும் அன்பளிப்பு, எண்ணெய், சீயக்காய், புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள்,கார வகைகள் மற்றும் காலை உணவு வழங்கி அனைவருக்கும்வாழ்த்துக்கள் கூறப்பட்டது.




இந்த அனைத்து நிகழ்விலும் வசந்தா ஆசிரியையுடன்
அவரது கணவர் மற்றும் சமூக ஆர்வலர் சித்திரவேல், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

