நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் கீழையூர் ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்டோபர் 21 நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் கீழையூர் ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ஆரிய நாட்டுத்தெரு பகுதியில் நகராட்சி நிதியின் கீழ் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும், வடக்குப்பொய்கை நல்லூரில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயன்பெறும் பயனாளி வீட்டிற்கு சென்று மருத்துவ பெட்டகத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வழங்கினார்.


மேலும் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.79 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் பழுது நீக்கம் செய்யும் பணிகளையும் மற்றும் திருப்பூண்டி ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் திருக்குவளை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் 2021-2022-ன் கீழ் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி அமைத்தல் பணிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் திருக்குவளை ஊராட்சி சமத்துவபுரத்தில் சமத்துவபுர மறுசீரமைப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகட்டும் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆயு;வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, கருவேலங்கடை கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் 6 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளும், பாரம்பரிய நெல் விதை விநியோகத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு பாரம்பரிய கருப்புகவுனி நெல்களையும், தேசிய உணவு பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு வரப்பு உளுந்துகளையும், கருங்கண்ணி ஊராட்சியில் விவசாயிகளுக்கு இடுபொருட்களையும் வழங்கி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் தெரிவித்ததாவது,
சம்பா திருந்திய நெல் சாகுபடி வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செய்யப்படுகிறது. புதிய யூரியா பயன்படுத்தப்படும் முறையினால் சராசரியாக 8 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். கீழையூர் வட்டாரம் கருங்கண்ணி கிராமத்தில் வேளாண்மைத்துறை மூலம் 100 சதவீத மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது. பாரம்பரிய நெல் விதை விநியோக திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் கருப்பு கவனி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் தி;ட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்படுகிறது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வி.சகிலா, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் ந.முருகேசன், நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவி, ஊரகவளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன், திரு.ராஜகுமார், திருக்குவளை ஊராட்சிமன்றத்தலைவர் திரு.இரா.பழனியப்பன், பிராதாபராமபுரம் ஊராட்சிமன்றத்தலைவர் திரு.இரா.சிவராசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

