வேதாரண்யத்தை அடுத்த செம்போடை யில் குயில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்தவர்கள் கைது
வேதாரணியம் அக்டோபர் 21
நாகப்பட்டினம் மாவட்டத்தில்
திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர்
என். சதீஷ் மற்றும் வன உயிரின காப்பாளர் நாகப்பட்டினம் யோகேஷ் குமார் மீனா உத்தரவின் பேரில் வேதாரணியம் வன உயிரின சரக வனசரக அலுவலர் பா. அயூப்கான் தலைமையில் வனவர் ஆர். ராமதாஸ் வனவர் ச. சதீஷ்குமார்
வனக்காப்பாளர் கே. ரணீஸ்குமார்
வேட்டை தடுப்பு காவலர்கள் கே.
நிர்மல் ராஜ்
ர. நவநீதகிருஷ்ணன் வி. பாண்டியன் மு.லோக நாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் வேதாரண்யம் வட்டம் செம்போடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த தோப்புத்துறை பகுதியை சேர்ந்த ஷேக் த/பெ ஜெயினுதீன்
மற்றும் சாகுல் ஹமீது த/பெ.அப்துல் ரஹீம் இருவரிடமும் இருந்த சாக்குப் பையை சோதனை செய்தனர். அந்த சாக்குப்பையில் தலை அறுக்கப்பட்டு உயிரற்ற நிலையில் 35 குயில் பறவைகள் இருப்பதைக் கண்டறிந்து அதனை கைப்பற்றி இருவரையும் வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து விசாரணை செய்கையில் தோப்புத்துறை சேர்ந்த அப்பா என்கிற ஜாகிர் உசேன் என்பவர் குயில் பறவைகளை விற்பனை செய்வதற்காக விழுந்தமாவடி பகுதியில் குயில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்யும் முத்துசாமி தகப்பனார் பெயர் ஆறுமுகம் என்பவரிடமிருந்து குயில் பறவைகளை வாங்கி வரச் சொன்னதாகவும் அதன்பேரில் குயில் பறவைகளை வாங்கி தலையை அறுத்துக் கொண்டு வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக விசாரணை செய்யப்பட்ட சாகுல் அமீது என்பவரை அழைத்துக்கொண்டு தோப்புத்துறை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை வள்ளியம்மை சாலையில் பிடித்தும் பின் விழுந்தமாவடி சென்று குயில் பறவைகளை
வேட்டையாடி விற்பனை செய்த முத்துசாமி தகப்பனார் பெயர் ஆறுமுகம் என்பவரையும் வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து விசாரணை செய்கையில் குயில் பறவைகளை வேட்டையாடிதையும் விற்பனை செய்வதற்காக அவைகளை வாங்கி வந்ததையும் ஒப்புக்கொண்டனர் .அதன்பேரில் எதிரிகள் நால்வர் மீதும் வன உயிரின குற்றவழக்கு பதிவு செய்து வன உயிரின காப்பாளர் நாகப்பட்டினம் யோகேஷ் குமார் மீனா உத்தரவுப்படி
குற்ற இணக்க கட்டணமாக தலா ரூபாய் 50,000/- வீதம் நால்வருக்கும் ரூபாய் 2,00,000/-
( ரூபாய் இரண்டு லட்சம் மட்டும் ) குற்ற இணக்க கட்டணமாக விதிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

