• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்துத்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
October 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்துத்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்துத்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் அக்டோபர் 14 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்துத்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது.ஆண்டு தோறும் அக்டோபர் 17-ம் தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உடற்காயத்தால் உண்டாகும் மரணத்தை தவிர்க்க கையாளவேண்டிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக ஓட்டுநர்கள் அனைவரும் சாலை விதிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் இயக்க கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்க கூடாது, அதிவேகம் செல்வது, இருக்கை பெல்ட் அணியாமல் வாகனம் இயக்குவது பேன்றவற்றை தவிர்த்து கவனமாக செயல்பட வேண்டும். ஓட்டுநராகிய அனைவரும் பயணிகள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு உயிர் காப்பாளராக இருக்க வேண்டும். அனைத்து ஓட்டுநர்களும் முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், சாலை விபத்து சக மனிதர்களுக்கு இடையேயான சக வன்முறை, தீ விபத்து, கட்டிட இடிபாடு மற்றும் பிற விபத்துகளால் நமக்கு உடல் காயங்கள் ஏற்படுகிறது என்பதை அறிகிறோம்.

இதனால் நாமும், நாம் அருகில் உள்ள உற்றார், உறவினர்களும், நண்பர்களும் உடற்காயங்கள், எலும்பு முறிவு, கை, கால்கள் பிற உறுப்புகள் இழப்பு உள்ளிட்ட உடற்பாதிப்புகளாலும், வேலை இழப்பால் வருமான இழப்பு உள்ளிட்ட பொருளாதார பாதிப்புகளாலும், பாதிக்கப்படுகிறார்கள். என்பதும், சில இடங்களில் மிகவும் கவலைப்படும் விதமாக உயிரிழப்புகளும் ஏற்படுகிறது என்பதும் அறிவோம்.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம் என்றும், மேலும் இதுபோன்ற விபத்துகளால் பாதிக்கப்பட்டவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேண்டும். அதன் பொருட்டு, விபத்து பகுதியில் இருந்து உடனடியாக அவசர உதவி எண்ணான 108-க்கு முதல் தகவல் தெரிவிக்கவும், அவசர ஊர்தி வரும்வரை ரத்தக் கசிவை கட்டுப்படுத்துவது, எலும்பு முறிவு ஏற்பட்ட இடம் நகராமல் இருக்க கட்டு போடுவது உள்ளிட்ட முதல் சிகிச்சைகளை செய்ய வேண்டும்.

மொத்தத்தில் காயங்களை குறைக்கவும், காயத்தால் பாதிக்கப்பட்டவரை பாதுகாக்கவும் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, உடல் காய தடுப்பு மற்றும் மேலாண்மை உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் நலப்பணிகள் ஜோஸ்பின் அமுதா, வட்டார போக்குவரத்து அலுவலர் க.பழனிச்சாமி, மாவட்ட வள மைய அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தே.மு.சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர்; நிலை 1 க.பிரபு, பயிற்சியாளர் துரைமாணிக்கம், வாகன ஓட்டுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 250 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா:  எம்எல்ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!!

Next Post
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 250 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா:   எம்எல்ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!!

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 250 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா:  எம்எல்ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In