வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேதாரணியம் அக்டோபர் 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினரால்
தமிழக அரசு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேன் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும்
தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும வகையில் காலித் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு எம் ஜி ராமமூர்த்தி தலைவர் வேதாரணியம் ஒன்றியம் தலைமை தாங்கினார்.


அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் நடராஜன் துவக்க உரையாற்றினார். வி எஸ் ராமமூர்த்தி, வி.போசன்,ச. மதிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
முருகேசன், ஏழுமலை, வேலாயுதம் ,சுந்தரம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்
இறுதியில் ஏ.காசிநாதன் பொருளாளர் நன்றி உரையாற்றினார்.இறுதியில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய்
மச்சோடா.

