வேதாரணியம் அக்டோபர் 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் திருமண மண்டபத்தில்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை நடத்திய சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு வேதாரணியம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை தாங்கினார். மேலும் வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ.புகழேந்தி,
திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,நகர்மன்ற உறுப்பினர் உமா புகழேந்தி,வேதாரண்யம் வர்த்தக சங்கத் தலைவர் தென்னரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் சித்ரா, சமுதாய சுகாதார செவிலியர் வேத லட்சுமி மற்றும் சுகாதார செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேதாரணியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 100 கர்ப்பிணி தாய்மார்கள் இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட தாய்மார்களுக்கு மாலை சந்தனம் பொட்டு மற்றும் வளையல்கள் ஆகியவை அணிவித்து வளைகாப்பு சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டன.
வந்திருந்த அனைத்து தாய்மார்களுக்கும் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.வேதாரண்யத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை நடத்தும் சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
வேதாரணியம் அக்டோபர் 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் திருமண மண்டபத்தில்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை நடத்திய சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு வேதாரணியம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை தாங்கினார். மேலும் வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ.புகழேந்தி,
திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,நகர்மன்ற உறுப்பினர் உமா புகழேந்தி,வேதாரண்யம் வர்த்தக சங்கத் தலைவர் தென்னரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் சித்ரா, சமுதாய சுகாதார செவிலியர் வேத லட்சுமி மற்றும் சுகாதார செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேதாரணியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 100 கர்ப்பிணி தாய்மார்கள் இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட தாய்மார்களுக்கு மாலை சந்தனம் பொட்டு மற்றும் வளையல்கள் ஆகியவை அணிவித்து வளைகாப்பு சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டன.



வந்திருந்த அனைத்து தாய்மார்களுக்கும் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

