நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் உடன்
இருந்தனர்.
நாகப்பட்டினம் அக்டோபர் 12
நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் உடன்
இருந்தனர்.அப்போது
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பள்ளி மாணவர்களின் நலனை கருதிற்கொண்டு பல்வேறு நல்லதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி மேல்நிலை பள்ளியில் பயிலும் 381 மாணவர்கள், 320 மாணவிகள் என மொத்தம் 701 மாணவ,மாணவிகளில் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கு ரூ.9,11,136 மதிப்பிட்டிலான 96 மாணவர்களுக்கு மாணவர் மிதிவண்டிகளும், 83 மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் வழங்கப்படுகிறது. ஆண் மிதிவண்டியின் விலை ரூ.5,175 பெண் மிதிவண்டியின் விலை ரூ.4,992 மொத்தம் 179 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் பல்வேறு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வருகிறார்கள். பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம், கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவர்கள் செல் போன்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டுவது போன்ற அனைத்தையும் தவிர்த்து படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும்.
ஆகவே படித்தால்தான் பெரிய வேலைகளில் அமர முடியும். நாடு வளர்ச்சி அடைவதில் பெறும்பங்கு மாணவ மாணவிகளிடம் உள்ளது. எனவே மாணவர்களாகிய நீங்கள் நன்றாக படித்து வாழக்கையில் நல்ல இடத்திற்கு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி திட்டச்சேரி பேரூராட்சி தலைவர் ஆயிஷா சித்திகா மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் திருமருகல் வட்டார ஆத்மாகுழு தலைவர் செல்வ செங்குட்டுவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

