வேதாரண்யத்தில் கேட்பாரற்று திரியும் மாடுகள்
இன்று நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு கால்நடை பட்டிகளில் அடைக்கப்பட்டன .
வேதாரணியம் அக்டோபர் 12
வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் மற்றும் கடை வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகளை அதன் உரிமையாளர் வரும் 11 ஆம் தேதிக்குள் பிடித்துக்கொள்ள வேண்டும் தவறும்பட்சத்தில் நகராட்சி ஊழியர்கள் மூலம் மாடுகள் பிடிக்கப்பட்டு கால்நடை பட்டிகளில் அடைக்கப்படும் என்றும் அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளரிடம் இருந்து ஒரு மாட்டிற்கு ரூபாய் ஆயிரம் அபராதமும் பராமரிப்பு செலவும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்திருந்தார்.மேலும் இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா கூறும்போது
வேதாரணியம் பகுதிகளில் தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது மானாவாரி பிரதேசமான இப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.தற்சமயம் ஆங்காங்கே சாகுபடி நிலங்களில் ஏராளமான கால்நடைகள் வந்து வயல்களில் சுற்றித்திரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது


மேலும் நகர்ப் பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை வைக்கும்போது அதைத் தின்றும் கால்நடைகள் சேதப்படுத்துகிறது .மேலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் கேட்பாரற்று திரிகிறது எனவே மாட்டின் உரிமையாளர்கள் தாங்களாகவே முன் வந்து மாட்டைப் பிடித்துக் கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் வயல்வெளிகளில் மற்றும் கடை வீதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு மாடுகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் பராமரிப்பு செலவும் சேர்த்து மாட்டின் உரிமையாளர் இருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் .அதன்படி இன்று அதிகாலை நகராட்சி ஆணையர் ஹேமலதா அறிவுறுத்தலின் பேரில் அவரது மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்களால்
வேதாரணியம் கடைத் தெருவில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு கால்நடை பட்டிகளில் அடைக்கப்பட்டன.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

