நாகப்பட்டினம் மாவட்டம் அக்டாபர் 11
நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் உரிமம் பெற்று “அனலாக் முறையில்” கேபிள் டிவி சேவையை வழங்கியமைக்காக, அரசுக்கு செலுத்த வேண்டிய அனலாக் தொகையினை நிலுவை வைத்துள்ள உள்ளுர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மீது வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் அனலாக் முறையை பயன்படுத்தி பதிவுசெய்த 240 உள்ளுர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கேபிள் டிவி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு மாதச்சந்தா தொகையாக ரூ.70 நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் அரசின் பங்காக ரூ. 20 உள்ளுர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மூலம் அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்
நாகப்பட்டினம் மாவட்டத்தில், தற்சமயம் சுமார் 197 உள்ளுர் கேபிள் டிவி ஆப்ரேட்டராக பணிபுரிந்து, தனியார் நிறுவன இணையதள கேபிள் சேவைக்கு சென்றுவிட்ட ஆப்ரேட்டர்கள் அரசுக்கு முறையாக சந்தா செலுத்தாமல் ரூ. 3,54,13,510 (மூன்று கோடியே ஜம்பத்து நான்கு இலட்சத்து பதின்மூன்றாயிரத்து ஜந்நூற்று பத்து மட்டும்) நிலுவை வைத்துள்ளார்கள்.
அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை உடனடியாக செலுத்த உள்ளுர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களிலிருந்து ரூ. 3,54,13,510 (மூன்று கோடியே ஜம்பத்து நான்கு இலட்சத்து பதி;மூன்றாயிரத்து ஜந்நூற்று பத்து மட்டும்) தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் 1864 – பிரிவு 5-ன் படி வசூல் செய்திட காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

